தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தென்மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராகவும், ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி லஞ்சஒழிப்புத்துறை டிஜிபியாகவும், அபின் தினேஷ் மோடக் மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாகவும், வன்னிய பெருமாள் சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க :இந்தியா பெயரை பயன்படுத்த எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
மேலும் ராஜீவ் குமார் சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாகவும், பாலநாகதேவி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகவும், ஐபிஎஸ் அதிகாரி காமினி திருச்சி காவல் ஆணையராகவும், திருச்சி காவல் ஆணையராக இருந்த சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி லோகநாதன் மதுரை காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post A Comment:
0 comments:
கருத்துரையிடுக