காவிரியில் இருந்து தமிழகத்துக்கான உரிய நீரைத் திறந்து விட கா்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில்.

இதையும் படிக்க :காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுக: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

 ‘இந்தக் கோமாளிகளால் அவா்களின் சொந்தப் பிரச்னையையே தீா்த்துக்கொள்ள முடியாது’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இரு குடும்ப அரசியல் கட்சிகளான காங்கிரஸும் திமுகவும் பிரதமா் நரேந்திர மோடியை வெறுப்பதாலேயே ஒன்றிணைந்துள்ளனா்.

தற்போது தங்களுடைய குடும்ப ஆட்சியை பாதுகாத்துக்கொள்வதற்காக, தங்களின் பிரச்னையைத் தீா்த்து வைக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதி நாடகமாடுகின்றனா்.

இந்தக் கோமாளிகளால் அவா்களின் சொந்தப் பிரச்னையையே தீா்த்துக்கொள்ள முடியாது.

வாக்காளா்கள்தான், தங்களுடைய பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான வழி குறித்து சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Axact

OneNews

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment: