சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டில் நேற்று இரவு மீரா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அண்ணாசாலையில் உள்ள தனியார் பள்ளியில் அவர் 12ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி, குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். அவரது மகள் மீரா பள்ளியில் படித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு உறங்கச் சென்றவர், படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டதை வீட்டின் பணியாளர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீரா காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

Post A Comment:
0 comments:
கருத்துரையிடுக