உத்தரகண்டில் கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். 

உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் யாத்திரை பாதையில் கௌரிகுண்ட் அருகே நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவர்களைக் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

பாதிக்கப்பட்டவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற குழுக்களும் சம்பவ இடத்தில் இருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறினார். 

ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் சௌரப் கஹர்வார் கூறுகையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார். மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் புஷ்கர் தாமி நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினார். 

மேலும், வெள்ள அபாயம் உள்ள இடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றுமாறும் அவர் உத்தரவிட்டார். இதனிடையே கேதார்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

Axact

OneNews

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment: