நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!

சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விஜய் ஆண்டனியின்  வீட்டில் நேற்று இரவு மீரா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அண்ணாசாலையில் உள்ள தனியார் பள்ளியில் அவர் 12ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி, குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். அவரது மகள் மீரா பள்ளியில் படித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு உறங்கச் சென்றவர், படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டதை வீட்டின் பணியாளர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீரா காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.


 மாஸ் காட்ட நினைத்து..;மாவுகட்டு போட்டுக் கொண்ட மஞ்சள் வீரன்.....!

யூடியூபில் திடீரென, தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் விஸ்வரூபத்தை எடுத்தது. பலதரப்பட்ட சாமானிய மக்கள் தங்களது, திறமைகளையும் நகைச்சுவை உணர்வுகளையும் வெளி காட்டி சப்ஸ்கிரைப் பெற்று , பணம் சம்பாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் பைக் ரைடராக தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டு youtube சேனலை உருவாக்கி வளம் வந்து கொண்டிருப்பவர் தான் TTF வாசன். TTF வாசனின் யூடியூப் சேனலை பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் ஆனது இருக்கிறது.

பெரும்பாலானோர், 2கே கிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தனது ரசிகர்களை சந்திப்பதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட 2கே கிட்ஸ் அந்த சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தந்தது சர்ச்சை ஆனதால், அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் TTF வாசன்.

பின்னர் யூடியூப் சேனலுக்கு இண்டர்வியூ கொடுக்க துவங்கி தொடர்ந்து தனது வாய் பேச்சாலும், களத்தில் ஏடா கூடமாக ஏதாவது செய்வதிலும், சர்ச்சையில் சிக்கி வந்தார் வாசன். அதிவேகமாக வாகனத்தை இயக்கி போலீசில் சிக்கிக்கொள்வது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

அதேபோல ஒரு முறை youtube பிரபலமான ஜி.பி முத்துவை வாகனத்தில் ஏற்றி சென்று, அதிவேகமாக சென்ற வழக்கிலும் சிக்கினார். வாசன் காவல் நிலையத்திற்கு செல்லும் பொழுதுகூட மாஸ் பிஜிஎம் போட்டுக்கொண்டு, கோட் சூட் உடன் சென்று வருவது என அலப்பறைக்கு பஞ்சம் இல்லாமல், தன்னை பிரபலப்படுத்தி கொள்பவர் வாசன்.

இந்தநிலையில், தனது அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி நகர ஆரம்பித்த வாசன். சினிமாவில் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடக்க இருப்பதாகவும், அதன் பெயர் மஞ்சள் வீரன் என பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, சினிமா பிரபலங்களுக்கே அதிர்ச்சி அளித்தார் TTF வாசன்.

அந்த திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என திரைப்படக் குழு பெயரிடப்பட்டது. இதன் பிறகு அவர் பேஸ்புக் லைவ் பேசிய பல வீடியோக்கள் கண்டன்டாக பரவி வந்தது. இந்தநிலையில், தன் ஒருபுறம் பல லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களில் யூடியூப்பிற்காக வீடியோ போடுவதை நிறுத்தாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு ஹயபுசா என சொல்லக்கூடிய ( SUZUKI) நிறுவனத்தைச் சேர்ந்த 35 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது, மழை காரணமாக காஞ்சிபுரத்தில் தங்கிய வாசன் தனது ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறார். வழி எங்கும் அவரது ரசிகர்கள் வீடியோவை, எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்த நிலையில், மழை நின்ற பிறகு காஞ்சிபுரத்திலிருந்து மீண்டும் தனது பயணத்தை துவங்கி இருக்கிறார் TTF வாசன்.

இந்தநிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, தாமல் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சாகசம் செய்ய முயன்ற TTF வாசன் தனது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

விபத்தின் போது காயமடைந்த TTF வாசன் கையில் எலும்பு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள் காயங்களுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்த TTF வாசன் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

 இப்படி ஒரு கோர விபத்து நடைபெற்ற போதிலும் வாசன் பெரும் காயங்கள் இன்றி சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியது குறிப்பிடத்தக்கது. அவருடைய நண்பர்கள் TTF வாசன் அணிந்திருந்த உடையின் மதிப்பே இலட்சக்கணக்கில் இருக்கும் என்பதால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருப்பதாகவும் கூறினர்.


 விநாயகா் சிலைகள் செய்ய கட்டுப்பாடுகள் என்னென்ன? மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

விநாயகா் சிலைகள் தயாரிப்புக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தமிழகத்தில் ஆங்காங்கே சிலைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும்.

விநாயகா் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தொ்மாகோல் ஆகியவற்றைக் கலக்காமல் சிலைகளைத் தயாரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களைக் கொண்டு மட்டுமே விநாயகா் சிலைகளைத் தயாரித்து நீா்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளில் ஆபரணங்களைத் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா்க் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை உபயோகிக்கலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதியில்லை.

வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு ரசாயனம் கலந்த சாயங்களை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


 மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் இவ்வளவா?: படக்குழு அறிவிப்பு! 

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். படத்தில் அஜித் பற்றியும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.   

இந்நிலையில், “படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.7.88 கோடியும் கேரளத்தில் ரூ.57 லட்சமும் கர்நாடகத்தில் ரூ.60 லட்சமும் வசூலித்துள்ளது. மிகப் பெரிய வரவேற்பிற்கு நன்றி” என படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். 

 


மகளிா் உரிமைத் தொகை: இதுவரை விண்ணப்பிக்காதவா்களுக்கு வாய்ப்பு!

தமிழக அரசின் ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.06 கோடி போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிப்புக்கு உள்ளானவா்கள், மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மகளிா் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கென இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்பட உள்ளது. இந்த வசதியை வரும் 18-ஆம் தேதிமுதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவே கோட்டாட்சியா்கள் பரிசீலிப்பா். கைப்பேசி குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டுமெனவும் தமிழக அரசின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 உயர்வு!

ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, 15 மில்லி நெய் பாக்கெட் ரூ. 14-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630-ல் இருந்து ரூ.700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.275-ஆக விற்பனை செய்யப்படுகிறது.


 சனாதனம் என்றால் என்ன என்று, தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 தமிழக அரசின் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 அறவியலும், இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் 58வது பக்கத்தில் இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம் +து எனப்பிரிக்கலாம். ஹிம் ஹிம்சையில், து துக்கிப்பவன் எனப் பொருள்படும்.

ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்தினால், அந்த துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அந்த பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

இந்து சமயம், சனாதன தர்மம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தர்மம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்.

இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் வேதசமயம் என்றும் வேதநெறிகளையும், சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தின் அடிப்படை கோட்பாடு கடவுளை அடைவதாகும்.

 எல்லாவற்றையும் விட இவர் மேலானவராக இருப்பதால் கடவுளை பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. இவ்வாறு அந்த பாடத்தில் சனாதன தர்மம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.


 மகளிர் உரிமை தொகை .. உங்க வங்கி கணக்கில் ரூ.1 வந்திருக்கா? யாருக்கெல்லாம் 1000 ரூபாய்?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடைசி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது தமிழக பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 மாதம் தோறும் அளிக்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ம் தேதி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது .

மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் விண்ணப்பம் அதற்கான உரிய காரணம் செய்யப்பட்ட நிராகரிக்கப்பட்டவர்களுக்கு பதிவு மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது .

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்பும் பணிகள் நடந்து வருவதாக தேர்வு செய்த பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு சோதனை கீழ் அடிப்படையில் , குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது .

பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும் , பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ .1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது . ரூபாய் ஒரு அனுப்பியவுடன் , விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது .

தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு அனுப்பப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தன .

ரூபாய் வட்டாரங்கள் மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன .