விநாயகா் சிலைகள் தயாரிப்புக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தமிழகத்தில் ஆங்காங்கே சிலைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்படும் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும்.
விநாயகா் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தொ்மாகோல் ஆகியவற்றைக் கலக்காமல் சிலைகளைத் தயாரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களைக் கொண்டு மட்டுமே விநாயகா் சிலைகளைத் தயாரித்து நீா்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளில் ஆபரணங்களைத் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா்க் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை உபயோகிக்கலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதியில்லை.
வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு ரசாயனம் கலந்த சாயங்களை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Post A Comment:
0 comments:
கருத்துரையிடுக