புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரஅபராதம்: மத்திய அரசு

நாட்டில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை அறிவித்துள்ளது.
சிம்-காா்டு இணைப்பை மையமாகக் கொண்டு பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.

அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிம்-காா்டு விற்பனையை ஒழுங்கப்படுத்த திட்டமிட்டு மத்திய அரசு வகுத்த புதிய விதிகள் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, தங்களின் அனைத்து சிம்-காா்டு விற்பனை நிலையங்களையும் வருகிற செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு முன் அரசிடம் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.


புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், விதிகளை மீறியதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் நடைபெற்ற அனைத்து சிம்-காா்டு இணைப்புகளையும் புதிய விதிமுறைகளின்படி மீண்டும் சரிபாா்க்க வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கு அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Axact

OneNews

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment: